கரூர் அருகே கள்ளத்தனமாக இயங்கிய, போலி ஆயில் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிரெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி. இவர் இப்பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.
இவரது மகன் பழனிவேல் (வயது 50), இப்பகுதியில் தேங்காய் எண்ணைய் ஆலைக்கு உரிமம் பெற்று, அந்த ஆயில் நிறுவனத்தின் பின்புறமாக ஒட்டு வீடு கட்டி அங்கே கள்ளத்தனமாக குருடு ஆயில், அதாவது பழைய ஆயில்களை, ஆட்டோ ஒர்க்ஸ், லாரி மெக்கானிக் செட்டுகளில் இருந்து வாங்கி வந்து, அதை காய்ச்சி, அதிலிருந்து வரும் ஆயிலை, தேங்காய் எண்ணை, விளக்கெண்ணை, நல்லெண்ணை என உணவுக்காக பயன்படுத்தப்படும் ஆயில்களாக பயன்படுத்தும் ஆயில்களில் கலப்படம் செய்து புழக்கத்தில் விட்டு உள்ளனர்.
இதை அங்கிருந்து வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் அங்கே சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 21 பேரல்கள் கலப்பட ஆயில்களை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மேலும் அந்த ஆயில்களை சோதனை மாதிரியாக எடுத்து அரசு ஆய்வகத்திற்கு அனுப்பபட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தையடுத்து ஆலையின் உரிமையாளர் பழனிவேல் தலைமறைவாகி விட்டார்.
பேட்டி : மீனாட்சி சுந்தரம் – உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர்