y ஆரணி,
First Published : 31 May 2013 02:46 AM IST
ஆரணி நகரில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், குட்கா ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
நகராட்சி சுகாதார அலுவலர் லட்சுமணன், உதவி ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் நகரில் உள்ள பல கடைகளில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பழைய பஸ் நிலையம், புதிய மசூதி தெரு, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா, புகையிலை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பல கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.